Posts

Showing posts from February, 2020

தீபம்

இரவு எட்டரை இருக்கும் நூலகத்திலிருந்து கிளம்பினான். எட்டு மணிக்கெல்லாம் உள்ளே வரும் வழியை அடைத்து விடுவார்கள் சுற்றிக் கொண்டு வெளியே வரும் வழியில் தான் வெளியே வர வேண்டும். பையை மாட்டிக் கொண்டு பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தான். அங்கு எவ்வளவு கூட்டம் இருக்கிறது என்று பார்த்தான் வழக்கத்துக்கு மாறாக நன்கைந்து பேர் மட்டும் நின்று கொண்டிருந்தனர். எப்போதும் பேருந்து நிறுத்தத்திலிருந்து பக்கத்திலிருக்கும் பள்ளிக்கூட வாயில் வரை கூட்டம் இருக்கும். அப்படி இருந்தால் நீண்ட நேரமாக பேருந்து வரவில்லை என்று அர்த்தம். ஆகவே இதற்கு முன் பேருந்து கடந்து வரவிருக்கும் அனைத்து நிறுதங்களிலும் இதே நிலைமை தான். இவனை வந்தடையும் போதே படியில் தொங்கிக்கொண்டு வருபவர்கள் புழுதிக் காற்றை முகத்தில் வாங்கியவாறும் நடுவில் இருப்பவர்கள் எந்த நேரத்திலும் மூச்சு திணறல் ஏற்படலாம் என்ற நிலையில்தான் இருப்பார்கள். எவ்வளவு வெண்ணெய் உண்டாலும் நிம்மதி அடையாத கண்ணனாய் இங்கு உள்ளவர்களையும் தன் வயிற்றில் ரொப்பியபடி பேருந்து செல்லும். அந்த வழியாக மொத்தமே இரண்டு பேருந்துகள் தான் வரும். நேராக சென்று இடப்பக்கமாக வளைந்து அடையார் மார்க்க...

பாதர்

மாரிமுத்து இதுவரை பார்த்த அனைத்து பள்ளிகளைப் போன்றுதான் அவன் பள்ளியும்  "ப" வடிவில் இருந்தது. ஆனால் மூன்று கோடுகளும் இணைக்கப்படாமல் இடைவெளியுடன் இருக்கும். "ப"னாவில் இரண்டு செங்குத்துக் கோடுகளும் ஓடு போட்ட கூரைகளைக் கொண்ட கட்டிடங்கள். பழமையின் காரணமாக ஓட்டின் சிவப்பு நிறம் வெளிர்த்திருந்தது. சுவர்கள்  சுண்ணாம்பு பூசப்பட்டு புதிதாக இருக்கும். இதைப் பார்க்கும் போது  இளநரை கொண்ட சயின்ஸ் வாத்தியார் தயிர்சட்டி எனும் தங்கராசுவின் நியாபகம் தான் அவனுக்கு வரும். காலையில் எட்டு மணிக்கு பேருந்து நிறுத்தத்திற்கு வந்தாக வேண்டும். எட்டிலிருந்து எட்டே காலுக்குள் எப்போது வேண்டுமானாலும் மினிபஸ் வரும். இரண்டு ரூபாய் ஐம்பது பைசா டிக்கெட். தினமும் ஏழு ரூபாய் அவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அவனது சட்டைப் பையிலோ அல்லது பென்சில் பாக்ஸிலோ அம்மா வைப்பார். வீட்டிலிருந்து இடப்பக்கம் நோக்கி பிரியும் சாலையில் நேராக சென்றால் நான்கு கிலோமீட்டரில் பள்ளிக்கூடம் வந்துவிடும். பேருந்து  எங்கும் திரும்ப தேவை இல்லை. ஆனால் மினி பஸ்ஸோ பேருந்து வசதியில்லாத பல ஊர்களுக்குள்ளும் சென்று பள்ளியை அடையும் ப...