Posts

மறைவின் வருகை

பாட்டா ஒருநாளும் என்னைத் தேடி வந்ததில்லை. ஆனால் எனக்கு பார்க்க வேண்டுமென்று தோன்றும்போது நிச்சயம் என் கண்ணில் தென்பட்டுவிடுவார். அப்படித்தான் அன்றொரு நாள் புரவிபாளையத்திலிருந்து எங்கள் ஊருக்கு வந்து சேரும் சாலையின் ஓரமாக நின்றிருந்த பாட்டாவைப் பார்த்தேன். மேலாடையின்றி தலையில் உருமாலையும் இடுப்பில் வேட்டியும் அணிந்து, நரைத்திருந்த புருவத்தின் மீது வலது கையை வைத்து அண்ணாந்து கண்களை இடுக்கி வானைப் பார்த்துக் கொண்டிருந்தார். அனிச்சையாக நானும் பாட்டா பார்த்த திசையில் மேலே நோக்கினேன். நடுவானில் இருந்த சூரியனின் ஒளி, கண்களை கூசச்செய்து கண்ணீரைத் துளிர்க்கச்செய்யும் அளவுக்கு பிரகாசமாக இருந்தது. சூரியனைச் சுற்றி ஒரு ஒளியாலான வட்டம் இருப்பது போலப்பட்டது. நான் பாட்டாவை நெருங்கினேன். ஆள் வரும் சத்தம் கேட்டு பாட்டா கைகளால் கண்களை கசக்கியபடி பார்த்தார். வருவது நானென அறிந்ததும் புன்னகையுடன் ‘இன்னைக்கு வட்டம் போட்டிருக்கு மழை வரும்’ என்றார். மீண்டும் மேலே வெளிச்ச வட்டத்தைப் பார்த்தேன். வெயில் பொழிந்துகொண்டிருந்தது. மழை வர்றது உறுதி என்றார். வட்டம் இருந்தா மழை வராதுன்னு தான அன்னைக்கு சொன்னீங்க...? அது ...

கவிதை

இருண்மையேயென்றான இரவு கொடுநடனமிடும் மாமழை பேரோசையென்றான நீர்த்தாளம்  நிருத்தியத்தில் கரைந்திடும் குட்டிப்பூனையின் கண்ணீரை காண்பதெப்படி காருண்யனே கணநேர மின்னலொளி அதை கம்பீர வேங்கையாக்குவதெப்படி  கார்வண்ணனே

மதிலுகள்

நீ பீரு தான குடிப்ப, பீருக்கு பன்னிக்கறி தான் நல்லா ஒணத்தியா இருக்கும். கால் கிலோ வறுவல் எம்பது ரூபா தான். ஒயின்சாப்புக்கு போற வழிலயே கடை இருக்கும் பாத்துருக்கேன். நான் பீரு குடிச்ச காலத்துல வாங்கித் திம்பேன். இந்த தடவ வாங்கிட்டு போவோம். எனக்கு ஒரு குவாட்டர் பத்தாதுதான் இருநதாலும் அதுக்கு மேல போனா வீட்டுல கண்டுபுடிச்சுடுவாங்க. டம்ளர் அப்புறம் மத்ததெல்லாம் அந்த செட்டி  கடைல வாங்கிக்கலாம். அப்புடியே போற வழில அவள பாத்துட்டு போலாம் என்று ராம் அடுக்கிக் கொண்டே போனான். நான்காம் வகுப்பு படிக்கும் போது ஐயனாரப்பன் கோவிலில் பன்றியை ஈட்டியால் குத்தி பலி கொடுத்துவிட்டு அந்த கோவிலைச் சேர்ந்த குடும்பங்களுக்கு கொடுப்பதற்காக பன்றியை வளர்த்தவர்கள் வீட்டிலேயே கூறு போட்டுக் கொண்டிருந்தார்கள்.  அங்கு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த என்னை "நீங்க இங்க நிக்குறத பாத்தா அப்பா என்னையதான் ஏசுவாரு" என்று  பன்றியை வெட்டிக் கொண்டே முனுசாமி சொன்னார்.  நான் அந்த தெருவுக்கு சென்றதை அப்பாவிடம் யார் முன்னிலையிலாவது பார்த்தவர்கள் வந்து கூறினால்,  அம்மாவும் என்னுடன் சேர்ந்து அப்பாவிடம் ஏச்சு வாங்...

அழைப்பு

கடைசியாக ஒருமுறை ருசியாக வயிறு முட்ட சாப்பிடலாம் என்று நல்ல கடையொன்றை தேடி நடந்தான். அண்டாவை தட்டும் சத்தமும் மசாலாவில் மினுக்கும் பீப்-உம் அதனுடன் இணைந்த பிரியாணி வாசமும்  நாவில் எச்சிலை சுரந்தது. அந்த உணவத்தில் ஏற்கனவே சாப்பிட்டு முடித்திருந்த ஒருசிலரும் பில் கொடுத்துவிட்டு செல்ல இவனும் அங்கு பரிமாறும் சிலரும் மட்டுமே இருந்தனர். அவர்களையும் உள்ளே சென்று சாப்பிட சொல்லிவிட்டு கல்லாவிலிருந்தவர் அவனை நோக்கி வந்து சாப்பிட என்ன வேண்டுமென கேட்டார்.  ஒரு சிறிய பித்தளை பாத்திரத்தில் பிரியாணி அவன்முன் வைக்கப்பட்டது. மணி மூன்றரை ஆகியிருந்தது. முந்தையநாள் மதியத்திலிருந்து ஒன்றும் சாப்பிடாததால் பித்தளை பாத்திரத்தில் இருந்த பிரியாணியை ஸ்பூனால் இலையில் தள்ளும் போது கையில் சிறிது நடுக்கம் இருந்தது. ஒரு மடக்கு தண்ணீரைக் குடித்துவிட்டு சாப்பிட ஆரம்பித்தான். சாப்பிடும் போது ஏதோ நினைவுக்கு வந்தவன் போல சுற்றும் முற்றும் பார்த்து சுவரில் ஒட்டியிருந்த விலைப்பட்டியலை கண்டடைந்து கண்களை அதில் ஓட்டினான். பீப் பிரியாணி – ரூ.160.  மிச்சம் ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபது ரூபாய். பயணத்தொகை போக கையிலிரு...

அகக்கண்

ஆள்கூட்டம் குறைவாக இருந்த அந்த பேருந்து நிலையத்தின் மூலையில் தனியாக எந்த சலனமும் இல்லாமல், தோள் பையை உட்கார்ந்திருந்த பெஞ்சில் தன் அருகில் வைத்துக்கொண்டு தனக்குள்ளாக ஆழ்ந்திருந்தார். அவராகத்தான் இருக்க முடியும் என்பதை தூரத்திலிருந்தே கண்டுகொண்டு ஒரு கணம் நின்று பரவசமும் பதற்றமும் மனதில் பொங்க அவரை நோக்கி காலை எடுத்து வைத்தான்.  ஒரேயொரு நாவல் மட்டுமே எழுதியுள்ளார். வேறொன்றும் இல்லாத கருமை நிற பின்னணியில் பொன்னிற எழுத்துக்களால் தலைப்பிடப்பட்ட முன்பக்க அட்டை. பின்பக்க அட்டையில் அவரின் கண்கள் இல்லாத கோட்டோவியம்.  நூற்றைம்பது பக்கம் தான். முதல்முறை தலைப்பை படித்ததும் ஏற்பட்ட திடுக்கிடல் இன்றும் நியாபகமிருக்கிறது. மானசீகமாக ஶ்ரீதருக்கென்றே எழுதப்பட்ட நாவல் என அவன் நினைத்ததுண்டு. புனைபெயரா நிஜபெயரா என்றறிய முடியாத, ஆசிரியர் குறிப்பில்லாத,  ஒரு நாவல். அவரின் பெயரையும் அந்த நாவலின் பெயரையும் கூகுளில் போட்டால் அந்த புத்தகம் கூட வராது. அந்த பதிப்பகம் கூட இப்போது இல்லை. அவரைப் பற்றிய எந்தவொரு குறிப்பும் எங்கும் இல்லை. அந்த நாவல் தான் அவர்.  ஶ்ரீதரிடமிருப்பது அவரின் கோட்டோவி...

தீபம்

இரவு எட்டரை இருக்கும் நூலகத்திலிருந்து கிளம்பினான். எட்டு மணிக்கெல்லாம் உள்ளே வரும் வழியை அடைத்து விடுவார்கள் சுற்றிக் கொண்டு வெளியே வரும் வழியில் தான் வெளியே வர வேண்டும். பையை மாட்டிக் கொண்டு பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தான். அங்கு எவ்வளவு கூட்டம் இருக்கிறது என்று பார்த்தான் வழக்கத்துக்கு மாறாக நன்கைந்து பேர் மட்டும் நின்று கொண்டிருந்தனர். எப்போதும் பேருந்து நிறுத்தத்திலிருந்து பக்கத்திலிருக்கும் பள்ளிக்கூட வாயில் வரை கூட்டம் இருக்கும். அப்படி இருந்தால் நீண்ட நேரமாக பேருந்து வரவில்லை என்று அர்த்தம். ஆகவே இதற்கு முன் பேருந்து கடந்து வரவிருக்கும் அனைத்து நிறுதங்களிலும் இதே நிலைமை தான். இவனை வந்தடையும் போதே படியில் தொங்கிக்கொண்டு வருபவர்கள் புழுதிக் காற்றை முகத்தில் வாங்கியவாறும் நடுவில் இருப்பவர்கள் எந்த நேரத்திலும் மூச்சு திணறல் ஏற்படலாம் என்ற நிலையில்தான் இருப்பார்கள். எவ்வளவு வெண்ணெய் உண்டாலும் நிம்மதி அடையாத கண்ணனாய் இங்கு உள்ளவர்களையும் தன் வயிற்றில் ரொப்பியபடி பேருந்து செல்லும். அந்த வழியாக மொத்தமே இரண்டு பேருந்துகள் தான் வரும். நேராக சென்று இடப்பக்கமாக வளைந்து அடையார் மார்க்க...

பாதர்

மாரிமுத்து இதுவரை பார்த்த அனைத்து பள்ளிகளைப் போன்றுதான் அவன் பள்ளியும்  "ப" வடிவில் இருந்தது. ஆனால் மூன்று கோடுகளும் இணைக்கப்படாமல் இடைவெளியுடன் இருக்கும். "ப"னாவில் இரண்டு செங்குத்துக் கோடுகளும் ஓடு போட்ட கூரைகளைக் கொண்ட கட்டிடங்கள். பழமையின் காரணமாக ஓட்டின் சிவப்பு நிறம் வெளிர்த்திருந்தது. சுவர்கள்  சுண்ணாம்பு பூசப்பட்டு புதிதாக இருக்கும். இதைப் பார்க்கும் போது  இளநரை கொண்ட சயின்ஸ் வாத்தியார் தயிர்சட்டி எனும் தங்கராசுவின் நியாபகம் தான் அவனுக்கு வரும். காலையில் எட்டு மணிக்கு பேருந்து நிறுத்தத்திற்கு வந்தாக வேண்டும். எட்டிலிருந்து எட்டே காலுக்குள் எப்போது வேண்டுமானாலும் மினிபஸ் வரும். இரண்டு ரூபாய் ஐம்பது பைசா டிக்கெட். தினமும் ஏழு ரூபாய் அவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அவனது சட்டைப் பையிலோ அல்லது பென்சில் பாக்ஸிலோ அம்மா வைப்பார். வீட்டிலிருந்து இடப்பக்கம் நோக்கி பிரியும் சாலையில் நேராக சென்றால் நான்கு கிலோமீட்டரில் பள்ளிக்கூடம் வந்துவிடும். பேருந்து  எங்கும் திரும்ப தேவை இல்லை. ஆனால் மினி பஸ்ஸோ பேருந்து வசதியில்லாத பல ஊர்களுக்குள்ளும் சென்று பள்ளியை அடையும் ப...