பாட்டா ஒருநாளும் என்னைத் தேடி வந்ததில்லை. ஆனால் எனக்கு பார்க்க வேண்டுமென்று தோன்றும்போது நிச்சயம் என் கண்ணில் தென்பட்டுவிடுவார். அப்படித்தான் அன்றொரு நாள் புரவிபாளையத்திலிருந்து எங்கள் ஊருக்கு வந்து சேரும் சாலையின் ஓரமாக நின்றிருந்த பாட்டாவைப் பார்த்தேன். மேலாடையின்றி தலையில் உருமாலையும் இடுப்பில் வேட்டியும் அணிந்து, நரைத்திருந்த புருவத்தின் மீது வலது கையை வைத்து அண்ணாந்து கண்களை இடுக்கி வானைப் பார்த்துக் கொண்டிருந்தார். அனிச்சையாக நானும் பாட்டா பார்த்த திசையில் மேலே நோக்கினேன். நடுவானில் இருந்த சூரியனின் ஒளி, கண்களை கூசச்செய்து கண்ணீரைத் துளிர்க்கச்செய்யும் அளவுக்கு பிரகாசமாக இருந்தது. சூரியனைச் சுற்றி ஒரு ஒளியாலான வட்டம் இருப்பது போலப்பட்டது. நான் பாட்டாவை நெருங்கினேன். ஆள் வரும் சத்தம் கேட்டு பாட்டா கைகளால் கண்களை கசக்கியபடி பார்த்தார். வருவது நானென அறிந்ததும் புன்னகையுடன் ‘இன்னைக்கு வட்டம் போட்டிருக்கு மழை வரும்’ என்றார். மீண்டும் மேலே வெளிச்ச வட்டத்தைப் பார்த்தேன். வெயில் பொழிந்துகொண்டிருந்தது. மழை வர்றது உறுதி என்றார். வட்டம் இருந்தா மழை வராதுன்னு தான அன்னைக்கு சொன்னீங்க...? அது ...
வயதின் நிர்பந்தம் வயது நம்மை நிர்பந்திக்கிறது பாடவும் நாவை அறுத்தெறியவும் வயது நம்மை நிர்பந்திக்கிறது வழிந்தோடவும் முட்டுக்கட்டை இடவும் வயது நம்மை நிர்பந்திக்கிறது ஆடவும் இரும்பு கால்சாராய் மாட்டிக் கொள்ளவும் இறுதியாக வயது நமக்கு அளிக்கிறது அது நிர்ப்பந்தித்ததை கைதிகள் சிலர் சங்கிலிகளில் வந்தனர் வருத்தமற்று ஆனால் சோர்வாக மிக சோர்வாகவும் தடுமாற்றத்துடனும் சிந்தனையும் வெறுப்பும் அற்று யோசிப்பதும் சண்டையிடுவதும் அற்று தோற்பதும் நம்பிக்கை கொள்வதும் அற்று நீண்ட போரின் முடிவுகள் சாவையும் எளிதாக்கின தமிழில்: வேல்முருகன்
இந்திய அரசியலமைப்பின் வரைவு அச்சிற்கு தயாராக இருந்த போது ஜவஹர்லால் நேரு ஶ்ரீ பிரேம் பிஹாரியிடம் கையெழுத்துப் பிரதி ஒன்றினை உருவாக்கித் தருமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்ட போது "எனக்கு ஒரு காசு கூட வேண்டாம். கடவுளின் கருணையால் அனைத்தும் வாய்க்கப்பெற்றுள்ளேன். என் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளேன்" எற்று பிரேம் பிஹாரி கூறினார். இருந்தாலும் அவருக்கு நேருவிடம் கேட்பதற்கு ஒன்று இருந்தது. கையெழுத்துப் பரதியின் அனைத்து பக்கங்களிலும் அவரின் பெயர் இருக்க வேண்டும் எனவும் கடைசி பக்கத்தில் அவர் பெயருடன் அவரது தாத்தாவின் பெயரும் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இதற்கு ஒப்புதலும் அவருக்கு கிடைத்தது. காலிகிராப்பிஸ்டுகளாக (calligraphists) இருந்த குடும்பத்தில் பிறந்த பிரேம் பிஹாரி சிறு வயதிலேயே பெற்றோர்களை இழந்தார். தேர்ந்த காலிகிராப்பிஸ்ட்டான தனது தாத்தா "மாஸ்டர் ராம் பர்ஷத்ஜி சக்சேனா" மூலம் வளர்க்கப்பட்ட அவர் அந்த கலையை தாத்தாவிடம் இருந்து கற்றுக் கொண்டு பிற்காலத்தில் இந்திய அரசியலமைப்பின் கையெழுத்துப் பிரதியை எழுதித்தர நேருவே வந்து கேட்கும...
Comments
Post a Comment